இயற்கையின் எச்சரிக்கையா? கனடாவில் 150 ஆமைகள் உடலங்களாக மீட்பு
கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் அமைந்துள்ள ஓபினிக் (Opinicon) ஏரியில் சுமார் 150 நார்த் மேப் (North Map Turtles) இன ஆமைகள் உடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த ஆமைகளின் ஓடுகள் உடைந்தும், உடல்கள் துண்டு துண்டாகவும் காணப்படுகின்றன. கால்டன் பல்கலைக்கழக உயிரியலாளர் கிரிகோரி புல்டே இந்த அதிர்ச்சித் தகவலை முதன்முதலில் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

ஏரியின் அடிப்பகுதியில் பனிக்கட்டிகளுக்கு அடியில் குளிர்கால உறக்கத்திற்காகக் குழுக்களாகத் தங்கியிருந்த ஆமைகளை, ஆற்று நீர்நாய்கள் (River Otters) வேட்டையாடியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
காலநிலை மாற்றத்தால் பனிப்படலங்கள் மெலிந்து போனதே, நீர்நாய்கள் ஆமைகளின் வாழ்விடங்களுக்குள் மிக எளிதாக நுழைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.
ஏரியில் உள்ள மொத்த ஆமை மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம் வரை இந்த ஒரே ஒரு சம்பவத்தால் அழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
படகுகளின் மோதல், வாழ்விடங்களை அமைக்கும் இடங்களும் அழிக்கப்படுதல் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய கட்டுமானங்கள் காரணமாக ஏற்கனவே இந்த இனம் 'சிறப்பு அக்கறை' (Special Concern) தேவைப்படும் பட்டியலில் உள்ளது.
இந்த ஆமைகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதால், இந்த திடீர் உயிரிழப்பு முழு இனத்தின் அழிவுக்கே வழிவகுக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.