8,500-க்கும் மேற்பட்ட கனடியர்கள் நாடு திரும்பினர்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் சிக்கியுள்ள கனடியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதே அரசின் முக்கிய முன்னுரிமை என்று வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சுமார் 8,500 கனடியர்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்கள் வெற்றிகரமாக கனடா திரும்பியுள்ளனர்.
மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான மூன்றாம் நாடுகளுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளோபல் அஃபர்ஸ் கனடா (Global Affairs Canada) இதற்கெனத் தனி அவசர மையத்தை அமைத்துள்ளது. இது தூதரகங்களுடன் இணைந்து வணிக ரீதியான விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்களை (Charter Flights) ஒருங்கிணைக்கிறது.
கனடா தனது நட்பு நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயல்படுகிறது.
உதாரணமாக, சூடானிலிருந்து வெளியேற பிரெஞ்சு ராணுவ விமானங்களையும், துபாயிலிருந்து வெளியேற இஸ்தான்புல் செல்லும் சிறப்பு விமானங்களையும் கனடியர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்த வெளியேற்றப் பணிகள் முழுமையாக இலவசம் அல்ல. விமானங்களுக்கான கட்டணத்தை அந்தந்தப் பயணிகள் ஏற்க வேண்டும்.
எனினும், நெருக்கடியான நேரங்களில் அரசாங்கம் முன்கூட்டியே இருக்கைகளை முன்பதிவு செய்து (Block-booking) மக்களுக்கு உதவுகிறது.
துபாயில் அதிக ஊதியம் தரும் வேலைகள், பெய்ரூட்டில் குடும்ப உறவுகள் மற்றும் ஈரானில் முதியவர்களைப் பராமரிக்கும் கட்டாயம் போன்றவற்றால் சுமார் 24,000-க்கும் மேற்பட்டோர் லெபனானிலும், 30,000-க்கும் மேற்பட்டோர் ஐக்கிய அரபு அமீரகத்திலும் தொடர்ந்து தங்கியிருக்கின்றனர்.
மத்திய கிழக்கின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால் கடவுச்சீட்டு (Passport) வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்படலாம் என்றும், நிலைமை சீராகும்போது இது சரி செய்யப்படும் என்றும் அமைச்சர் ஆனந்த் உறுதியளித்துள்ளார்.