நவராத்திரியில் இந்த செடிகளை நட்டால் போதும்! செல்வங்கள் வந்து சேரும்
விரதங்களில் மிகவும் முக்கியமானது நவராத்திரி விரதம், தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.
நவராத்திரியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நைவேத்தியம், அம்பாளுக்கு சாற்ற ஒவ்வொரு விதமான மலர், ஒன்பது நாளும் வாசிப்பதற்கு ஒன்பது வகையான வாத்தியங்கள், அம்பாளைப் பூஜிக்க ஒன்பது வகையான மந்திரங்கள் என்று ஏராளமாக இருக்கிறது.
இந்நிலையில் நவராத்திரி அன்று எந்த செடிகளை நடலாம், அதற்கான பலன்கள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
நவராத்திரியின் போது வீட்டில் துளசி செடியை நட்டு வைத்தால் லட்சுமி கடாட்சம் பெருகும், பணப்பிரச்சனை தீரும் என நம்பப்படுகிறது.
இதுதவிர ஞாயிறு மற்றும் ஏகாதசி நாட்கள் கழித்து தினமும் தண்ணீர் ஊற்றி வருவதுடன், மாலையில் விளக்கு ஏற்றவும்.
இதேபோன்று வாழை கன்றை நட்டு வைத்தாலும் கஷ்டங்கள் தீரும் என நம்பப்படுகிறது, ஒவ்வொரு வியாழனன்றும் சில துளிகள் பாலை வாழை மரத்தில் விட்டு வந்தால் சந்தோஷம் கிடைக்குமாம்.
நவராத்திரியின் போது சங்குபுஷ்பத்தின் வேரை வீட்டிற்கு கொண்டு பூஜையறையில் வைத்தால் பணக்கஷ்டங்கள் நீங்கும்.