நெதர்லாந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு எதிராக வன்முறை வெடிப்பு!
நெதர்லாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்ப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நெதர்லாந்தில் பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் கடைகளை சூறையாடி பொருட்களை திருடி சென்றதோடு சாலையில் நின்ற வாகனங்களை தீவைத்து எரித்தனர்.
இந்த வன்முறையின் போது கொரோனா பரிசோதனை மையம் ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது.
நெதர்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,017- பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 9,52,950- ஆக உள்ளது.