ஒரே நகரில் 48 பேர்கள் பாதிப்பு: கனடாவை உலுக்கும் புதியவகை நோய்
கனேடிய மாகாணம் நியூ பிரன்சுவிக்கின் Moncton நகரில் மூளையை பாதிக்கும் அரிதான நோய் பரவுவதை நிபுணர்கள் அடையாள கண்டுள்ளனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நினைவாற்றல் இழப்பு, பேசுவதில் சிரமம் அல்லது வாகனம் ஓட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2015 முதல் இதுவரை Moncton நகரில் மட்டும் 48 பேர்கள் மருத்துவ உதவியை நாடியுள்ளனர். இதில் சிகிச்சை பலனின்றி 6 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த நோயானது 18 வயது முதல் 85 வயதுக்குட்பட்டவர்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் உட்பட அனைத்து வயதினரையும் குறிவைப்பதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் நிபுணர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இந்த அரிய நோயின் பின்னணி தொடர்பில் இதுவரை உறுதியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் தொடக்கத்தில் கவலை, மனச்சோர்வு மற்றும் எரிச்சல் போன்ற நடத்தை மாற்றங்களை அனுபவித்துள்ளனர்.
மட்டுமின்றி உடல் வலி, தசை வலிகள் உள்ளிட்டவையும் ஆரோக்கியமான நபர்களில் காணப்பட்டுள்ளது. ரத்த பரிசோதனைகளிலும், நோயின் தோற்றம் குறித்து மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை என்றே கூறப்படுகிறது.
தற்போது கொரோனா பரவல் இருப்பதால், இந்த நோய்க்கான ஆய்வுகள் மிக மிக மெதுவாகவே நகர்வதாக கனேடிய ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.