மோட்டார் சைக்கிள்களுக்கு விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு
மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டுப்பாட்டு நுட்பத்தின் ஒழுங்குமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும்.
125 CC சக்திக்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கு இந்த கட்டுப்பாட்டு நுட்பத்தின் ஆவணம் உரிய தேதியில் இருந்து கட்டாயமாகும். இந்த ஆவணத்தில் மோட்டார் சைக்கிள் வெளியிடும் புகையின் அளவு மற்றும் மோட்டார் சைக்கிள் வெளியிடும் ஒலியின் அளவு போன்ற தரவுகள் உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவிலான மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே சாலைகளில் பயணிக்க முடியும்.
இந்த ஆண்டு அக்டோபர் 1ம் திகதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது. மேலும் இந்த ஆவணம் இல்லாமல் பயணம் செய்வது கிரிமினல் குற்றமாகும். இந்த சட்டத்தை அமல்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது.
முன்னதாக, இது ஜனவரியில் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 1ம் திகதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், வாங்கிய நான்கு வருடங்கள் பழமையான மோட்டார் சைக்கிள்களுக்கு மட்டுமே சட்டம் பொருந்தும். பிரான்சில் 2.5 மில்லியன் மக்கள் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.