உக்ரைன் - ரஷ்யா போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது! பிரதமர் மோடி
உக்ரைன் - ரஷ்யா போரால் எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஸ்கால்சுடன் (Olof Scholes) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பில் மோடி பேசுகையில்,
உக்ரைன் விவகாரத்தில் பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வு என கூறியிருந்தோம். இந்தப் போரில் யாரும் வெற்றி பெற மாட்டார்கள் என நாங்கள் நம்புகிறோம்.
உக்ரைன், ரஷ்யா மோதலால் எண்ணெய் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. நாம் இதை மிகவும் தீவிரமாக எதிர்கொள்ள வேண்டும். இதனுடைய பாதிப்பும் தீவிரமாக இருக்கும் என மோடி தெரிவித்தார்.
ஜெர்மனி பிரதமர் ஸ்கால்ஸ் பேசுகையில்,
உக்ரைன் மீதான தாக்குதலின் மூலம், சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை ரஷ்யா மீறி உள்ளதாக குற்றம்சாட்டினார்.
பொதுமக்கள் கொல்லப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதுடன், உக்ரைனில் இருந்து ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.