நில எல்லை வழியாக பயணிக்கும் அமெரிக்கர் அல்லாதோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
நில எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் பயணிக்கும் அமெரிக்கர் அல்லாதோர் முழுமையாக தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதன்முறையாக அறிவிக்கப்பட்ட இந்த விதியானது, தற்போது சனிக்கிழமை மீண்டும் அறிவித்துள்ளனர்.
குறித்த அறிவிப்பானது கனடாவில் இருந்து அமெரிக்கா செல்வோருக்கும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா செல்லுவோருக்கும் பொருந்தும் என்பதுடன், படகு மூலம் எல்லையை கடப்பவர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவை கருதி அமெரிக்கா செல்வோர் அல்லது சுற்றுலா பயணிகள் என அனைவருக்கும் இது பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் புதிய விதிமுறையானது அமெரிக்க குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்லது அமெரிக்க மண்ணில் பிறந்த குடிமக்களுக்கு பொருந்தாது என விளக்கமளித்துள்ளனர்.