நோர்த் யோர்க்கில் ரொறன்ரோவை சேர்ந்த இளைஞன் சுட்டுக்கொலை!
நோர்த் யோர்க்கில் 19 வயதான இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நோர்த் யோர்க்கில் அமைந்துள்ள பிரபல விரைவு உணவு வர்த்தக நிலையம் ஒன்றில் வாகன தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபர் ரொறன்ரோவை சேர்ந்த 19 வயதான Malachi Elijah Bainbridge என்ற இளைஞர் என தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயங்களுக்கு இலக்காகியிருந்த குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.