பிரிட்டிஷ் கொலம்பியா இளையோர்களுக்கு தடுப்பூசி பெற பெற்றோரின் ஒப்புதல் வேண்டுமா? வெளியான விளக்கம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட இளையோர்கள் இனி தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம்.
குறிப்பிட்ட வயதுடைய இளையோர்கள் உரிய இணைய பக்கத்தில் பதிவு செய்து தங்களுக்கான முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.
மட்டுமின்றி, தங்கள் அருகாமையில் செயல்படும் சுகாதார மையங்களில் தொடர்பு கொண்டும் தடுப்பூசி தொடர்பான தகவல்களை பெறலாம்.
தடுப்பூசி பெற்றுக்கொள்ள இளையோர்கள் அவர்களின் அடையாள அட்டை, மற்றும் தனிப்பட்ட சுகாதார இலக்கம் உள்ளிட்டவைகளை மட்டுமே எடுத்து வந்தால் போதும்.
பெற்றோர்களின் ஒப்புதல் எதுவும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தேவை இல்லை என்றே சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட இளையோர்களின் எண்ணிக்கை 300.000 என தெரிய வந்துள்ளது.
தற்போதைய சூழலில் பைசர் நிறுவன தடுப்பூசி மட்டுமே, குறித்த வயதினருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.