பெருகிவரும் கொரோனா தொற்று; சிங்கப்பூர் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
உலகம் முழுவதும் 2019-ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுப் பாதிப்பிலிருந்து தற்போது வழமை நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இதற்கு நேர்மாறாக உள்ளது.
அதாவது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அங்கு 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மேலும் சுவாசம் தொடர்பான நோய்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன.
இதனால் அங்குள்ள மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகக் காணப்படுகின்றன.
எனவே கொரோனா தொற்று பரவலை தடுக்க கூட்ட நெரிசலான இடங்களை தவிர்த்தல், முகக்கவசம் அணிதல், கொரோனா தடுப்பூசி போடுதல் உள்ளிட்டவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இந்த சூழலில் சிங்கப்பூர் மருத்துவமனைகள் நாட்டில் கொரோனா நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், சமீபத்திய தொற்று அலைகளைத் தொடர்ந்து தேவைப்பட்டால் அவற்றின் திறனை அதிகரிக்கத் தயாராக இருப்பதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.