ரொறன்ரோ தீ விபத்துச் சம்பவத்தில் ஒருவர் பலி
ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் ரொறன்ரோவின் ரிவர்டேல் பகுதியில் பதிவாகியுள்ளது.
ரிவர்டேல் வீதியின் அமைந்துள்ள இல்லமொன்றில் இந்த தீ விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் தீயனைப்புப் படையினருக்கு தீ விபத்து குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயனைப்பு படையினர் வீட்டிற்குள் பிரவேசித்த போது நபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக தீயனைப்பு படையினர் தெரிவிக்கின்றனர்.