அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் ஒருவர் பலி
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் காலநிலையில் ஏற்பட்ட திடீரென சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. இந்த புயல் மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று காரணமாக சுழன்றடித்தது.
இதில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன் , மின்கம்பங்கள் சரிந்தன, வீடுகள் மற்றும் கடைகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.
புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதுடன் புயலால் லூசியானா மாகாணத்தின் நியூ ஆர்லியன்ஸ் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
புயலில் சிக்கி ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்ததுடன், நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின.
மேலும் இந்த அனர்த்தத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகரில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.