தவறான முடிவை எடுத்துவிட்டான்: இளைஞர் தொடர்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய குடும்பம்
வாஸ்கானா ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர் தொடர்பில் குடும்பத்தினரும் நண்பர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Abbotsford பகுதியை சேர்ந்த 20 வயதான சாம்வெல் யுகோ கடந்த ஆண்டு மே 21ம் திகதி வாஸ்கானா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் தற்கொலை செய்து கொண்டதாகவே குடும்பத்தினர் அனைவரும் நம்புகின்றனர். சம்பவம் நடந்த அன்று இரண்டு முறை ரெஜினா பொது மருத்துவமனைக்கு யுகோ சென்றுள்ளார்.
பகல் நேரம் ஒருமுறையும், தற்கொலை செய்து கொள்வதன் முன்னர் ஒருமுறையும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் இரண்டாவது முறை சென்ற போது காவலாளிகளால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
உதவி கேட்க சென்ற யுகோ, பின்னர் சடலமாக திரும்புவார் என யாரும் அறிந்திருக்கவில்லை. கருப்பினத்தவர் என்பதாலையே, யுகோவுக்கு உதவி மறுக்கப்பட்டதாக அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்து 4 மாதங்களுக்கு பின்னர் Saskatchewan சுகாதாரத்துறை நான்கு பக்க மதிப்பாய்வை வெளியிட்டது. அதில், உரிய நடைமுறைகளை யுகோ பின்பற்ற தவறியதாலையே, அவருக்கு உதவி மறுக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் கருப்பினத்தவர்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியே என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது Saskatchewan பகுதி கருப்பின மக்கள் ஒரு குழுவை அமைத்து, மன அழுத்தம் காரணமாக அவதிப்படும் இளைஞர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
யுகோவுக்கு ஏற்பட்ட நிலை இனி வேறு இளைஞர்களுக்கு வேண்டாம் என்றே அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.