ஒன்றாரியோ முதல்வரின் அதிரடி அறிவிப்பு
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford) தேர்தல் தொடர்பில் அதிரடி அறிவிப்பினை வெளியிட உள்ளார்.
சட்ட மன்றை கலைக்கூமறு அதிகாரபூர்வமாக ஃபோர்ட் இன்றைய தினம் (03-05-2022) கோரிக்கை ஒன்றை முன்வைக்க உள்ளார்.
சட்ட மன்றை கலைப்பது தொடர்பில் கோரிக்கை விடுக்கும் நோக்கில் டக் ஃபோர்ட், இன்றைய தினம் ஆளுனர் நாயகம் எலிசபத் டவுட்ஸ்வெல்லை சந்திக்க உள்ளார்.
சட்டமன்றை கலைக்குமாறு முதல்வர் ஃபோர்ட் விடுக்கும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி நாளைய தினம் முதல் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அதிகாரபூர்வமாக ஒன்றாரியோ மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் 2ம் திகதி ஒன்றாரியோ மாகாணத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை சட்ட மன்றத் தேர்தல் தற்போதைய ஆளும் கட்சியே வெற்றியீட்டும் என கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றியீட்டும் எனவும், பிரதான எதிர்க்கட்சியாக என்.டி.பி. கட்சியை பின்தள்ளி, லிபரல் கட்சி முன்னணி வகிக்கும் என மேலும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.