Ontario வில் பயங்கரம்: ஒரே வீட்டில் 3 பேர் சடலங்களாக மீட்பு
கனடாவின் ஒண்டாரியோ (Ontario) மாகாணத்தில் உள்ள பிராக்வில் (Brockville) பகுதியில், ஒரே வீட்டில் மூன்று பேர் உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒண்டாரியோவின் பிராக்வில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில், கார்டியர் கோர்ட் (Cartier Court) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலிருந்து பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த பொலிஸார், வீட்டிற்குள் மூன்று பேர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டெடுத்தனர்.