மூடப்படும் கடைசி மளிகை கடை: பரிதவிப்பில் ஒன்ராறியோ கிராம மக்கள்
கிழக்கு ஒன்ராறியோ கிராமம் ஒன்றில் எஞ்சியிருக்கும் ஒரே ஒரு மளிகை கடையும் விரைவில் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஒன்ராறியோவின் St. Isidore கிராமத்திலேயே குறித்த மளிகை கடை மூடப்படுகிறது. டிசம்பர் 4ம் திகதி குறித்த கடை மூடப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் சுமார் 800 பேர்கள் பரிதவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.
பெரும்பாலும் முதியோர்களே வசித்துவருவதால், நீண்ட தூரம் பயணப்பட்டு அத்தியாவசியப்பொருட்களை வாங்கிவரும் நிலைக்கு அவர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.
பொதுவாக, இப்பகுதி மக்கள் நடந்தே சென்று மளிகைப் பொருட்களை வாங்கி வந்துள்ளனர். ஆனால் டிசம்பர் 4ம் திகதிக்கு பின்னர் கண்டிப்பாக அடுத்த கிராமங்களுக்கு செல்லும் நிலை ஏற்படும் என்கிறார் 15 ஆண்டுகளாக St. Isidore கிராமத்தில் வசித்துவரும் ஒருவர்.
குறித்த மளிகை கடையை கடந்த 30 ஆண்டுகளாக முன்னெடுத்து நடத்திவந்த தம்பதி, தற்போது ஓய்வெடுத்துக்கொள்ள முடிவு செய்ததை அடுத்தே, அவர்கள் கடையை மூட முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறித்த கடையை இன்னொரு முதலாளியிடம் ஒப்படைக்க தகுதியான நபரை கடந்த சில ஆண்டுகளாக தேடி வந்ததாகவும், ஆனால் தங்களுக்கு அப்படியான ஒருவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள் இந்த தம்பதி.