ஆங் சான் சூகியை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகியை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மியன்மாரில் இராணுவ சதிப் புரட்சியின் மூலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது சட்டவிரோதமாக தகவல்தொடர்பு உபகரணங்களை இறக்குமதி செய்ததற்காக மியான்மர் பொலிசார் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்றவரான ஆங் சான் சூகி, நேற்று முன்தினம் நடந்த இராணுவ சதி புரட்சியை தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டார். இதற்கு அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளன. 75 வயதான ஆங் சான் சூகி மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
இதன்போது தலைநகர் நய்பிடாவில் உள்ள அவரது வீட்டில் நடத்திய தேடுதலில் வோக்கி-ரோக்கி ரேடியோ சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியதுடன் அவை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிசார் குறிப்பிட்டதை அடுத்து ஆங் சான் சூகி விளக்கம்றியலில் வைகப்பட்டுள்ளார்.