ஒட்டாவா அருவியில் மாயமான இளைஞரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல் வெளியானது
அருவியில் விழுந்து மாயமான நபர் தொடர்பில் திங்கள்கிழமையும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஒட்டாவா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் தொடர்பில் அவரது பெயர், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சனிக்கிழமை இரவு 7 மணிக்குப் பிறகு ரைடோ ஆற்றின் அருவிக்கு அவசரகால உதவிக்குழுவினர் முதலில் அழைக்கப்பட்டனர். தகவலை அறிந்த பொலிசார், தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர், மருத்துவ உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் சம்பவயிடத்தில் திரண்டதுடன், மாயமான இளைஞரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது.
இந்த நிலையில், மாயமானவர் 24 வயதான Jessie Tessier என ஞாயிறு இரவு அடையாளம் காணப்பட்டது. இருப்பினும், தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை.
நீரின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதாலையே, தேடுதல் நடவடிக்கைகள் பின்னடைவை எதிர்கொள்வதாக ஒட்டாவா பொலிசார் தெரிவித்துள்ளனர்.