கனடாவில் திருமண நிகழ்வில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு குறித்த திடுக்கிடும் தகவல்
கனடாவில் அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
ஒட்டாவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் ஆறு பேர் காயமடைந்திருந்தனர்.
எனினும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அப்பாவிகள் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
திருமண நிகழ்வு நடைபெற்ற இடத்தின் வெளியே நின்றிருந்தவர்களே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
எனினும், வீதியில் இருந்தவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
26 வயதான சாயிட் மொஹமட் அலி மற்றும் 29 வயதான அப்திசாகுர் அட்பி தாஹிர் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர்.
இந்த மோதல் சம்பவமானது கோஷ்டி மோதல் என கருதப்படுகின்றது.