திருமணத்திற்கு சென்ற வேளை ஏற்பட்ட பெரும் அசம்பாவிதம்: மணமகன் உட்பட 9 பேர் பலி!
பாகிஸ்தானில் திருமண நிகழ்விற்கு மக்களுடன் சென்ற வேன் மீது லொறி மோதி மணமகன் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தகவல்வ் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணம் பாபர்லோய் பகுதியில் இருந்து ஒரு மினிவேன் புறப்பட்டது.
அதில் திருமண விழாவுக்காக மணமகன் வீட்டார் சென்று கொண்டிருந்தனர்.
கோட்கியில் உள்ள சுக்கூர்-முல்தான் நெடுஞ்சாலையில் சென்றபோது அந்த வேன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி எதிரே வேகமாக வந்த ஒரு லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து சம்பவத்தில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் படுகாயம் அடைந்த 6 பேருக்கு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பில் வழக்கு பதிந்த பொலிஸார் லொறி சாரதியை கைது செய்தனர்.
திருமணத்துக்கு சென்ற நிலையில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.