தாய்லாந்து இளவரசின் உடல்நிலை குறித்து அரண்மனை வெளியிட்ட தகவல்
தாய்லாந்து இளவரிசி பஜ்ராகிதியாபா மஹிடோல் (Bajrakitiyabha Mahidol) நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
தாய்லாந்தின் மன்னரான மஹா வஜிரலோங்கோர்னின் முதல் மனைவியின் ஒரே வாரிசான இளவரிசி பஜ்ராகிதியாபா மஹிடோல் (44) கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக பாங்காக்கின் வடக்கே உள்ள நகோன் ராட்சசிமாவில் ராணுவ நாய் பயிற்சியின் போது இளவரசி பஜ்ரகிதியாபா மஹிடோல் திடீரென மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவர் உடனடியாக பாங்காக்கிற்கு கொண்டு செல்லப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், இளவரிசியின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எனினும், தற்போது வரை அவரது இதயம் துடிக்கும் செயல் முறையின் ஒரு பகுதி சரியாக செயல்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அவரது இதயத் துடிப்பை கண்காணிக்கவும் அவரது இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும் மருத்துவக் குழுவுக்கு அரசு சார்பில் மருத்துவம் மற்றும் உபகரணங்களை வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரண்மனையின் முறையான வாரிசு யார் என்பதை தாய்லாந்து அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்ற சூழலில், இளவரசியின் உடல்நலக்குறைவு அரசளவில் ஏதேனும் பாதிப்பையோ மாற்றங்களையோ எற்படுத்தும் என்று கூறப்படுகிறது.