கனடாவை நடுங்க வைத்த கொடூரனுக்கு பரோல் மறுப்பு
இரட்டை கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் பால் பெர்னார்டோவுக்கு கடந்த 3 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக பரோல் மறுக்கப்பட்டுள்ளது.
மிக கொடூரமான குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ள பால் பெர்னார்டோ, கடந்த 1995ல் இருந்தே சிறையில் உள்ளார்.
பரோல் கேட்டு இரண்டாவது முறையாக அதிகாரிகளை நாடியிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விசாரணை முன்னெடுத்த அதிகாரிகள், தற்போதைய சூழலில் பரோல் அனுமதிக்க முடியாது என மறுத்துள்ளனர்.
1995ல் இருந்தே சிறைவாசம் அனுபவித்துவரும் பால் பெர்னார்டோ, ஒரு ஆபத்தான குற்றவாளி என்று கருதப்படுகிறார்.
14 வயதான லெஸ்லி மஹாஃபி மற்றும் 15 வயது கிறிஸ்டன் பிரஞ்சு ஆகிய இரண்டு பதின்ம வயதினரை கடத்தி செயின்ட் கேதரைன்ஸ் அருகே சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றத்தில் தண்டனை அனுபவித்து வருகிறார் பால் பெர்னார்டோ.
கடத்தல், சித்திரவதை மற்றும் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பெர்னார்டோவின் முன்னாள் மனைவி Karla Homolka கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 12 ஆண்டுகள் சிறைவாசத்திற்கு பின்னர் 2005ல் விடுதலையானார்.
ஸ்கார்பரோ கொடூரன் என அடையாளம் காணப்பட்ட பால் பெர்னார்டோ, பல பெண்களை சீரழித்துள்ளதை ஒப்புக்கொண்டிருந்தார்.
மட்டுமின்றி, Homolka-ன் 15 வயது சகோதரியை இருவரும் சேர்ந்து சீரழித்து கொலை செய்த வழக்கிலும் 1990ல் பெர்னார்டோ குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டார்.