ஒரே உணவகத்தில் திரண்டிருந்த 25 பேர்: ரொறன்ரோ பொலிசார் எடுத்த நடவடிக்கை
ரொறன்ரோவில் உணவகம் ஒன்றில் விருந்து கொண்டாடிய 25 பேர்கள் கொண்ட கும்பலுக்கு பொலிசார் அபராதம் விதித்துள்ளனர்.
ரொறன்ரோவில் ஞாயிறன்று மாலை நேரம் சுமார் 5.45 மணியளவில் பொலிசாருக்கு அழைப்பு சென்றுள்ளது. அதில், பரோ உணவகத்தில் திரளான மக்கள் கூடியிருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், குறித்த உணவகத்தில் இருந்த 25 பேர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர்.
இது அவசரநிலை மேலாண்மை மற்றும் சிவில் பாதுகாப்பு சட்டத்தை மீறுதல் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களாகவே, ரொறன்ரோவில் உணவகங்களின் உள்ளே உணவருந்தும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, 25 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஒரே உணவகத்தில் விருந்து கொண்டாடியுள்ளனர்.