இரும்பு ஆலைக்குள் இருந்து வெளியேறும் மக்கள்
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் திகதி போர் தொடுத்த நிலையில் கடந்த 68 நாட்களாக போர் நீடித்து வருகிறது.
உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருவதனால் ரஷியா உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பகுதியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரஷியா தாக்குதலை நடத்தியது. கிழக்கு உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்கள் ரஷியாவுக்கு ஆதரவாக உள்ளனர்.
அங்குள்ள மரியுபோல் நகரை கைபற்ற ரஷியா தீவிர தாக்குதல் நடத்தியது. இதன் மூலம் அந்த நகரம் ரஷியாவிடம் வீழ்ந்தது. அதேசமயம் மரியுபோலில் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய இரும்பு தொழிற் சாலை இருக்கிறது.
அங்கு ஆயிரக்கணக்கான பொது மக்களும் உக்ரைன் ராணுவ வீரர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் இரும்பு ஆலைக்குள் சிக்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணி நேற்று தொடங்கியது.
அதன்படி இதுவரை சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்த இரும்பு தொழிற்சாலைக்குள் இருக்கும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து ரஷிய வீரர்களை தாக்கி வரும் நிலையில், அவர்களை சரணடையு மாறு ரஷியா எச்சரித்தபோதும், அதனை காதில் வாங்காத உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.