நேபாள நாடாளுமன்றத்தில் பிரதமர் முன் தீக்குளித்த நபருக்கு நேர்ந்த பரிதாபம்!
நாடாளுமன்றத்திலிருந்து பிரதமர் பிரசண்டா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார்.
நேபாளத்தின் புதிய பிரதமராக கடந்த டிசம்பர் மாதம் (2022) சிபிஎன்-மாவோயிஸ்ட் கட்சியை சேர்ந்த புஷ்ப கமல் தஹால் (Pushpa Kamal Dahal) என்ற பிரசந்தா தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நேபாள நாடாளுமன்றத்தில் இருந்து நேற்று பிற்பகலில் பிரதமர் பிரசந்தா வெளியேறிய போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் டீசலை ஊற்றி தீக்குளித்தார்.
உடனடியாக அந்த பகுதியிலிருந்து பிரதமர் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தீக்குளித்து நபரை மீட்டு பாதுகாப்புப் படையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்கொலைக்கு முயன்ற நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில் தீக்குளித்த நபர், இல்லம் மாவட்டத்தை சேர்ந்த 37 வயதான பிரேம் பிரசாத் ஆச்சார்யா எனத் தெரியவந்துள்ளது.
மேலும், பிரதமர் வெளியேறும் நேரத்தில் அவர் தீக்குளித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பான செய்திகள்
நாடாளுமன்றத்தில் இருந்து பிரதமர் வெளியேறும் போது தீக்குளித்த நபரால் பரபரப்பு!