பைசர் நிறுவனத்தின் ஒரு கொரோனா மாத்திரையின் விலை என்ன தெரியுமா?
அமெரிக்காவில் உள்ள பைசர் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்று நோய் சிகிச்சைக்கான ‘பேக்ஸ்லோவிட்’ என்னும் மாத்திரையை உருவாக்கி உள்ளது.
இந்த மாத்திரையானது, வீட்டில் இருந்து சிகிச்சை பெறுகிற, அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்கும் இந்த மாத்திரையை பரிந்துரைக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த மாத்திரைக்கு நல்லதொரு செயல்திறன் இருப்பது பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு 10 மில்லியன் கொரோனா மாத்திரைகளை 5.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ய இருப்பதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் இது இந்திய பண மதிப்பில் ஒரு கோடி மாத்திரைகளை 39,378.05 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கிறது. அப்படி பார்த்தால் ஒரு மாத்திரையின் விலை 39 ஆயிரத்து 378 ரூபாய் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.