விமானத்தில் மோதிய பறவைக்கூட்டம்; அதன்பின்னர் நடந்தது
துருக்கியின் விமானம் ஒன்று பறவைக்கூட்டத்துடன் மோதிய நிலையில் அவரசமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், துருக்கி சரக்கு விமானமான Turkish Airlines Cargo boeing 777-200F (TC-LJN,) போயிங் 777 வகை சரக்கு விமானம் ஒன்று, துருக்கி இஸ்தான்புல் அட்டதுர்க் விமான நிலையத்திலிருந்து கஜகிஸ்தான் Almaty விமான நிலையத்துக்கு புறப்பட்டு மேலெழுந்தது.
இதன்போது விமானம் மேலழுந்த சிறிது நேரத்தில் பறவைக் கூட்டதுடன் மோதியதில் விமானத்தின் மூக்கு பகுதியும் (flight nose) , உடல் பகுதியிலும் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து , விமானி உடனடியாக இஸ்தான்புல் அட்டதுர்க் விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன் தொடர்புகொண்டு விமானத்தை அவசரமாக இறக்க உதவி கோரினார்.
இதன்பின் அனுமதியை அடுத்து விமானத்தில் இருந்த எரிபொருளினை கணிசமான அளவு வானில் வெளியேற்றி ( fuel dumping) செய்து விமானி விமானத்தினை பாதுகாப்பாக தரையிறக்கியுள்ளார்.




