ஜோ பைடனுக்கு மிக சிறந்த பரிசை வழங்கிய பிரதமர் மோடி!
டோக்கியோவில் நடந்த சந்திப்பின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (Joe Biden) பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) சஞ்சி கலை ஓவிய தொகுப்பை பரிசாக வழங்கினார்.
டோக்கியோவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கு முன்னர், டோக்கியோவில் நடந்த சந்திப்பின் போது, அமெரிக்க அதிபர் பைடனுக்கு பிரதமர் மோடி சஞ்சி கலை ஓவிய தொகுப்பை பரிசாக வழங்கினார்.
சஞ்சி ஓவியம் என்பது கிருஷ்ணரின் வழிபாட்டு முறையிலிருந்து தோன்றி வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் செழித்து வளர்ந்த கலை பாரம்பரியமாகும்.
சஞ்சி என்பது காகிதத்தில் கையால் டிசைன்களை வெட்டும் கலை.இந்த ஓவியம் இப்பகுதியின் நாட்டுப்புற கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இது 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் வைணவ கோவில்களில் அதிகம் காணப்பட்டது.
இந்த சஞ்சி கலை ஓவிய தொகுப்பு, தேசிய விருது பெற்ற கலைஞரால், மதுராவிலிருந்து வரும் தாக்குராணி மலைகளை பற்றிய கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது.
மேலும், இருநாட்டு தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு என்பது இந்தியா - அமெரிக்க இருதரப்பு உறவில் முக்கிய தூண் என்று குறிப்பிட்டு, இரு தரப்பினரும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.
இந்தியா - அமெரிக்க விரிவான உலகளாவிய பாதுகாப்பு கூட்டாண்மையானது சட்டத்தின் ஆட்சி மற்றும் விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கு வகை செய்கிறது.
இருதரப்பு விஷயத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.