போலாந்தில் இருளில் முழ்கிய ஆயிரக்கணக்கான வீடுகள்!
போலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
போலாந்தில் நேற்றையதினம் (23-07-2022) கடும் புயல் வீசியது. அந்நாட்டின் தெற்கு - கிழக்கு மாகாணங்களில் கடும் புயலுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
இதனால் அந்த நாட்டின் மசோவா மாகாணத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியது.
மின் இணைப்பு துண்டிப்பால் 36 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த புயல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புயலால் வீடுகள், சாலைகள் பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.