அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பரபரப்பு; உட்செல்ல வெளியேற தடைபோட்ட பொலிஸார்
அமெரிக்க அதிபராக நாளைமறுநாள் ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இதற்கான ஒத்திகை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் திடீரென நாடாளுமன்றத்தை மூட போலீசார் உத்தரவிட்டதுடன் உள்ளே யாரும் வரவும், வெளியே செல்லவும் தடைவிதித்தனர். உடனடியாக ஆயிரக்கணக்கான பாதுகாப்புப்படையினர் மின்னல் வேகத்தில் நாடாளுமன்ற வளாக்தில் குவிக்கப்பட்டு செக் பாயின்ட் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் ஒத்திகையில் ஈடுபட்ட அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர்.
அப்போது அதிகாரி ஒருவர் இது ஒத்திகை இல்லை எனக் கூறியதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் போலீசார் தரப்பில் நாடாளுமன்றம் அருகில் உள்ள இடத்தில லேசான தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், வெளிப்புற பாதுகாப்பு அச்சுறுத்தலால் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.