பாழடைந்த கட்டிடத்தின் கூரையிலிருந்து விழுந்து இளைஞன் பலி
கனடாவின் ஹாமில்டனில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றின் கூரையிலிருந்து தவறி விழுந்து 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
606 அபர்தீன் அவென்யூவில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள், அந்த 19 வயது இளைஞர் கட்டிடத்தின் கூரையிலிருந்து கீழே விழுந்திருப்பதைக் கண்டறிந்தனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில்: அந்த இளைஞர் கூரையிலிருந்து விழுந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இந்த மரணத்தில் தற்போதைக்கு எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான பின்னணியும் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த துயரமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாழடைந்த கட்டிடங்களுக்குள் நுழைவது ஆபத்தானது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.