கனடாவில் மாயமான இளம்பெண் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்!
கனடாவில் உயிரிழந்த இளம்பெண்ணின் சடலம் இன்னும் கிடைக்காத நிலையில் சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் எட்மண்டனை சேர்ந்தவர் பில்லி ஜான்சன் (30). இளம்பெண்ணான இவர் கடந்தாண்டு டிசம்பர் 24ஆம் திகதி மாலை காணாமல் போனநிலையில் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து பில்லி உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் அவர் சடலம் இன்னும் கிடைக்காத நிலையில் பொலிசார் தொடர்ந்தும் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பில்லியை கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் இரு தினங்களுக்கு முன்னர் கென்னித் கோர்டோரலி (35) என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பில்லியும், கென்னித்தும் ஒருவருக்கொருவர் நன்கு அறிமுகமானவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பொலிசார் சடலத்தை தேடி வரும் நிலையில் சந்தேகத்துக்கு இடமான விடயங்களை கண்டால் உடனடியாக பொதுமக்கள் தொடர்பு கொள்ளுமாறும் கூறியுள்ளனர்.