இரட்டைக் கொலை குறித்து விசாரிக்கச் சென்ற பொலிசார்... காத்திருந்த அதிர்ச்சி
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இரட்டைக் கொலை ஒன்று தொடர்பாக ஒருவரை விசாரிக்கச் சென்ற பொலிசாருக்கு, அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
Kamloops என்ற இடத்தைச் சேர்ந்த சகோதரர்களான Carlo Fryer(31) மற்றும் Erick Fryer (29) ஆகிய இருவரின் உடல்கள் சென்ற மாதம் (மே) 10 ஆம் திகதி, வாக்கிங் சென்ற தம்பதியரால் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக Naramata என்ற இடத்திலுள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் சென்றுள்ளனர். வீடு திறந்திருக்கவே, வீட்டுக்குள் சென்ற பொலிசார், அங்கு பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதைக் கண்டுள்ளனர். அது கொலையாக இருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த மூவர் தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.