நடிகை சித்ரா மரணத்திற்கு இவர்கள் தான் காரணம்! கணவரின் பரபரப்பு தகவல்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்த இவர் அதே தொலைக்காட்சியில் பிரபலமான தொடரில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் சித்ரா.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த சித்ரா தூக்கிட்டு மர்மமான முறையில் இறந்த சம்பவம் சின்னதிரை வட்டாரம் மற்றும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இருப்பினும், இவருடைய திடீர் மரணத்திற்கு காரணம் என்ன? தற்கொலையா? கொலையா? அதற்கு காரணமானவர்கள் யார்? சித்ராவிற்கு நீதி கிடைத்ததா? என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றது.
இந்த நிலையில், நடிகை சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக சித்ராவின் கணவன் ஹேமநாத் தெரிவித்துள்ள தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரா மரணம் தொடர்பில் கணவன் ஹேம்நாத் அளித்த பேட்டி,
நடிகர் சித்ராவின் மரணத்தில் அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி இருக்கிறார்.
மேலும், இது தொடர்பில் ஊடகவியாளர்களிடம் கூறி கணவர் ஹேம்நாத் கூறியிருப்பது, சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்துள்ளது.
என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார்? என்பது பற்றிய விவரம் வெளியாகும். சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் தற்போது என் உயிருக்கும் குறி வைத்துள்ளனர்.
சித்ரா மரணத்திற்கு அரசியல்வாதிகள் தான் காரணம்,
எனக்கு பொலிஸ் பாதுகாப்பு தேவை. உயிருக்கு பயந்து தற்போது வழக்கறிஞர் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளேன். சித்ரா மரணத்திற்கு காரணமானவர்கள் அரசியல் அதிகாரம் அடைந்துள்ளேன். சித்ரா என்று கூறியிருக்கிறார். இப்படி ஹேமநாத் அளித்து இருந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சித்ரா மரணம் தற்கொலை என்றிருந்த நிலையில் தற்போது அரசியல் தலைவர் தொடர்பு இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை தீவிரப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.