சிறுமிகள் புதைக்கப்பட்ட விவகாரம்... கனேடிய கர்தினால்களுடன் போப் பிரான்சிஸ் சந்திப்பு
கனடாவில் முன்னாள் இந்திய உண்டுறை பள்ளி ஒன்றில் பூர்வக்குடி சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் முதன் முறையாக போப் பிரான்சிஸ் சந்திப்பு ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
சனிக்கிழமை வாடிகனில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதில் கனேடிய கர்தினால்கள் இருவர் போப் பிரான்சிஸ் உடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
கர்தினால் Michael Czerny மற்றும் கர்தினால் Marc Ouellet ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாக வாடிகனில் இருந்து வெளியாகும் தகவல் தெரிவிக்கின்றன.
ஆனால் இரு கர்தினால்களுடனான சந்திப்பில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தொடர்பில் ரகசியம் காக்கப்படுகிறது.
கத்தோலிக்க தேவாலயம் சார்பில் செயல்பட்டு வந்த முன்னாள் பள்ளியில் 215 சிறுமிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டும், இதுவரை போப் பிரான்சிஸ் எந்த கருத்தும் கூறாதது கனேடிய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒருமுறை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்த வேளையில், இது தொடர்பில் நினைவுக்கு கொண்டு வந்தும், போப் பிரான்சிஸ் சார்பில் மன்னிப்பு கேட்கப்படவில்லை.
மேலும் கனடாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்கள் இது தொடர்பில் வாடிகனுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
2013ல் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தெரிவான போப் பிரான்சிஸ் ஒவ்வொரு நாடுகளுக்கும் உத்தியோகப்பூர்வமாக செல்லும் போது மட்டுமே, அந்த நாட்டில் தேவாலயங்களால் இழைக்கப்பட்டிருக்கும் கொடுமைகளுக்கு மன்னிப்பு கோருவது வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனால் கனடாவில் சமீபத்திய நாட்களில் அவர் விஜயம் செய்வதாக தகவல் இல்லை என்றே கூறப்படுகிறது.