நிதியமைச்சராகிறாரா பிரதமர் ரணில் விக்ரமசிங்க?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் நிதி அமைச்சராக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, நிதியமைச்சர் பதவிக்கு முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், இதுவரை யாரும் தீர்க்கமான முடிவை அறிவிக்காத நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நிதியமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டிய தேவை உள்ளது.
நிதியமைச்சர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை அல்லது நாளை மறுதினம் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.