மியன்மாரில் இராணுவச் சதி? ஆங் ஷான் சூகி உட்பட முக்கியஸ்தர்கள் தடுப்பில்
மியன் மார் நாட்டின் ஆட்சியாளரும் வெளிவிவகார அமைச்சருமான ஆங் சன் சூகி உள்ளிட்ட மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் அந்நாட்டில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி அறிவித்துள்ளது. மியன்மாரில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலை அடுத்து நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தினருக்கும் சிவில் அரசாங்கத்திற்கும் இடையே முறுகல் நிலை அதிகரித்து வந்தது.
அத்துடன் இராணுவ சதிப்புரட்சி தொடர்பான அச்சங்களும் வலுத்துவந்தன. இந்த நிலையில் ஆங் சன் சூகி நாட்டின் ஜனாதிபதி வின் மின்ட் உட்பட ஏனைய அரச தலைவர்கள் அதிகாலை கொண்டுசெல்லப்பட்டதாக மியோ நண்ட் கூறினார். மியான்மர் நாட்டு பெண் தலைவர்.
ஆங் சன் சூ கி. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் ஆளும் கட்சி தலைவராக இருக்கிறார். அந்நாட்டு வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். இதேவேளை சக்திவாய்ந்த இராணுவ ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைதிவழியில் ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக 1991ம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் ரொஹின்ஜா முஸ்லிம்களுக்கு எதிரான அடக்கு முறையை கண்டிக்கத் தவறியமை மற்றும் கண்டுகொள்ளாமல் இருந்தமைக்காக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன் நோபல் பரிசை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்ககது.