ரஷ்யாவில் கிளம்பிய எதிர்ப்பு; சமூக வலைதளங்கள் முடக்கம்
ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படை உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போரில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டதுடன், உக்ரைனில் வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் உகரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தாக்குதலை உடனடியாக ரஷ்யாநிறுத்த வேண்டும் என பேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து , உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.