புட்டினால் 13,000 வீரர்களை இழந்த உக்ரைன்!
ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்த பின்னர் சுமார் 13,000 யுக்ரைனிய படையினர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை யுக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
10,000 முதல் 13,000 படையினர் உயிரிழந்திருக்கலாம் என உத்தியோகபூர்வமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என யுக்ரைனின் செனல் 24 அலைவரிசையிடம் மிகாலியோ போடோலியாக் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய படையெடுப்பு
கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்ய படையெடுப்பு ஆரம்பித்த பின்னர் 100,000 வரையான ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருகுகலாம் எனவும், மேலும் 100,000 முதல் 150,000 ரஷ்ய படையினர் காயமடைந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் அல்லது மீண்டும் போருக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் எனவும் போடொலியாக் கூறியுள்ளார்.
மேலும் யுக்ரைனில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஜெனரல் மார்க் மைலி கடந்த மாதம் கூறியிருந்தார்.
அதேவேளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி ஷோய்கு கடந்த செப்டெம்பர் மாதம் இது தொடர்பாக கூறுகையில், 7 மாத காலத்தில் 5937 ரஷ்ய படையினர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.