மகாராணியை சந்தித்தனர் ஜோ பைடன் தம்பதியினர்
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை (Queen Elizabeth) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) மற்றும் அவரது மனைவி ஜில் பைடன்(Jill Biden) ஆகியோர் சந்தித்துள்ளனர்.
பிரிட்டனில் ஜூன் 11 முதல் 13 வரை 'ஜி 7' நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேரடியாக கலந்து கொண்டார். இதேவேளை ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரின் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
இந்நிலையில் நேற்றையதினம் இங்கிலாந்தின் பெர்க் ஷயர் பகுதியில் அமைந்திருக்கும் விண்ட்சர் கோட்டையில் (Windsor castle) பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் (Jill Biden)ஆகியோர் சந்தித்து உரையாடியுள்ளனர்.
குறித்த சந்திப்பின் பின் செய்தியாளர்களிடம் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் பேசிய பைடன்(Joe Biden) , ராணி "மிகவும் கிருபையானவர்".ஞாயிற்றுக்கிழமை விண்ட்சர் கோட்டையில் இருவரும் சந்தித்த சிறிது நேரத்திலேயே இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது தாயை நினைவுபடுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
1951 இல் பிரிட்டன் ராணியாக எலிசபெத்(Queen Elizabeth) முடிசூட்டிக்கொண்டதில் இருந்து, கடந்த 69 ஆண்டுகளில் 1963 - 1969 வரை ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சனை தவிர அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளையும் சந்தித்து உரையாடியுள்ளார்.
அந்தவகையில் ராணி அமெரிக்க ஜனாதிபதியான ஹாரி எஸ் ட்ரூமனை(Harry S.Truman) முதன் முதலில் சந்தித்தார். மேலும் 2019 ஆம் ஆண்டில் ராணி முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.


