அமெரிக்காவிற்கு தப்பியோட தயாராகும் ராஜபக்ச சகோதரர்!
இலங்கையின் இன்றைய வங்குரோத்து நிலைக்கு செல்ல முக்கிய காரணமாக இருந்த முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அமெரிக்காவிற்கு தப்பியோட முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளமைக்கு பசிலின் நிர்வாக திறன் இன்மையே காரணம் என பல தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கத்தை வீடு செல்லுமாறு கோரி நாட்டில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பசில் கா... கா.. எனவும் போராட்டகாரர்கள் கூக்குரலிடுகின்றனர்.
அதோடு போராட்டகாரர்கள் கடந்த ஒரு வாரகாலமாக காலி முகத்திடலில் முகாமிட்டுள்ளதுடன் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பாமல் தாம் வீடுகளுக்கு திரும்பபோவதில்லை என சூளுரைத்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க பசில் ராஜபக்ச கொரோனா தொற்றுக்குள்ளானதாக இன்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் நாட்டை விட்டு தப்பியோடுவதற்காக அவர் போட்ட திட்டமே அது எனவும் தகவல்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.