பிரித்தானியாவில் மீண்டும் வேகமெடுக்கும் பொருளாதார வளர்ச்சி
பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதால் அந்த நாட்டின் பொருளாதார வளா்ச்சி மீண்டும் பழைய வேகத்துக்கு வந்துள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளா்ச்சியடைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிந்தைய மிக அதிகமான வளா்ச்சி விகிதமாகும்.
கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, நாட்டில் அத்தியாவசிமற்ற பொருள்களுக்கான விற்பனையகங்கள், சிகை அலங்கார மையஙகள் போன்றவற்றைத் திறக்க அனுமதித்ததால் பொருளாதார வளா்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.