மொறோக்கோ நாட்டில் இருந்து கடல் வழியாக ஸ்பெயின் நாடுவரை நீந்திய அகதி இளைஞன்!
மொறோக்கோ நாட்டில் இருந்து கடல் வழியாக, ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு வரும் அகதிகள் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.
இதனால் மொறோக்கோ நாட்டை மற்றும் ஸ்பெயினை பிரிக்கும் கடல் எல்லையில் கடுமையான பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆனால் நேற்றைய தினம் சிறுவன் ஒருவன், தனது கால் சட்டை மற்றும் சேட்டில் பிளாஸ்டிக் பாட்டில்களை மாட்டிக் கொண்டு, கடலில் நீச்சல் அடித்தே , ஸ்பெயின் நாட்டுக்குள் வந்த காட்சி வீடியோவில் சிக்கியுள்ளது.
ஒரு கட்டத்தில் கரையில் பொலிசாரை கண்டதும் அந்தச் சிறுவன் கரைக்கு வர மறுத்ததும். பின்னர் ஓடித் தப்ப முனைந்ததும் மிகவும் பரிதாபமான விடையம்.
ஆனால் அவனை பொலிசார் கைது செய்து கொண்டு செல்கிறார்கள். அவர்கள் பின்னர் அந்தச் சிறுவனை மொறோக்கோ நாட்டிற்கு திருப்பி அனுப்பி விடுவார்கள்.
மொறோக்கோ நாட்டில் நிலவும் கடும் பஞ்சம் , வேலை இல்லா திண்டாட்டம் ஆகியவற்றால் வாடும் இளைஞர்கள். நல்ல வாழ்க்கையை தேடி அகதிகளாக ஸ்பெயின் நாட்டுக்குள் நுளைந்து வருகிறார்கள்.