கனடாவில் பள்ளி மீது தாக்குதல் நடத்தப் போவதாக மிரட்டிய சிறுவனுக்கு எதிராக வழக்கு
கனடாவின் வடக்கு ரெஜினா (Regina) பகுதியில் உள்ள பள்ளி ஒன்றிற்குத் துப்பாக்கிச் சூடு மிரட்டல் விடுத்ததாக 16 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரெஜினா காவல் துறையின் (RPS) தகவலின்படி, ரோச்டேல் பவுலேவர்டு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்குத் தான் துப்பாக்கியைக் கொண்டு வரப்போவதாக மாணவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக விசாரணையைத் தொடங்கிய காவல்துறையினர், சந்தேக நபரை அடையாளம் கண்டு அதே நாளில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனின் பெயர், 'இளையோர் குற்றவியல் நீதிச் சட்டத்தின்' கீழ் உள்ள பாதுகாப்புக் காரணங்களால் வெளியிடப்படவில்லை. அச்சிறுவன் மீது 'கொலை மிரட்டல் விடுத்தல்' என்ற ஒரு குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை 9:30 மணியளவில் ரெஜினா மாகாண இளையோர் நீதிமன்றத்தில் அந்தச் சிறுவன் முதன்முறையாக ஆஜர்படுத்தப்பட்டார்.
இதே சம்பவத்தின் தொடர்ச்சியாக, துப்பாக்கியைப் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்ததாக 38 வயது நபர் ஒருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.