பிரம்டனில் ஆயுதங்களுடன் கொள்ளையிட்ட சிறுவர்கள்
கனடாவின் பிராம்டன் பகுதியில் மருந்தகங்களில் கொள்ளையிட்ட மூன்று சிறவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பீல் பிராந்திய போலீசார் இவ்வாறு மூன்று பேரை கைது செய்துள்ளனர், பீல் பிராந்திய வலயத்தில் அண்மைய நாட்களில் பல மருந்தகங்களில் குறித்த நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதம் 2ம் திகதி முதல் 19ஆம் தேதி வரையில் பிராந்தியத்தில் 8 மருந்தகங்களில் குறித்த நபர்கள் பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில் இந்த கொள்ளை சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் களவாடப்பட்ட இரண்டு வாகனங்களை கொள்ளைகளுக்காக பயன்படுத்தி உள்ளனர்.
சந்தேக நபர்களுக்கு எதிராக மொத்தமாக 56 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 18, 17 மற்றும்16 வயது களை உடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பில் பிராந்திய போலீசார் தெரிவிக்கின்றனர்.