சாலைப் பயணத்தை தவிருங்கள்... மக்களை அறிவுறுத்திய கனேடிய மாகாணம்
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாண நிர்வாகம் தமது குடிமக்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அடுத்த அறிவிப்பு ஒன்று வெளியாகும் வரையில் Inverness மற்றும் விக்டோரியா மாவட்டங்களில் மக்கள் சாலைப் பயணத்தை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
செவ்வாயன்று இரவு 11 மணிக்கு முன் வெளியிடப்பட்ட குறித்த அவசர எச்சரிக்கையில், கடுமையான வானிலை காரணமாக, பயணம் பாதுகாப்பற்றதாக மாற வாய்ப்புள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், குறிப்பிட்ட மாவட்டங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளது அல்லது பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த எச்சரிக்கை விடுக்கப்படுவதற்கும் சில மணி நேரம் முன்னர், சுமார் 9.30 மணியளவில் நோவா ஸ்கோடியாவின் விக்டோரியா மாவட்டத்தில் மாகாண நிர்வாகம் அவச நிலை பிரகடம் செய்திருந்தது.
மட்டுமின்றி, அடுத்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரையில், மக்கள் கவனமுடனும் பாதுகாப்புடனும் இருக்க கேட்டிருந்தனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் தற்போது பாதுகாப்பை உறுதி செய்ய சாலைகள் மற்றும் பாலங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
மேலும், பணியாளர்கள் தங்கள் வேலையைச் செய்ய அனுமதிக்க, மக்கள் தங்கள் வீட்டிலேயே தங்குமாறு அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.