ட்ரம்ப், நெதன்யாகுவை நரகத்திற்கு அனுப்பினால் பலநூறு கோடி சன்மானம் ; ஈரான் தரப்பில் முயற்சி
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதல் 40 நாட்களாக நீடித்த நிலையில், போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மேற்காசிய பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது.
இந்த சூழலில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரை கொலை செய்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சட்ட மசோதா
இவர்களை நரகத்திற்கு அனுப்பி வைப்பவர்களுக்கு பரிசு தொகையை கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டில் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுபற்றி தி டெலிகிராப் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் தேசிய பாதுகாப்பு ஆணைய தலைவர் இப்ராகிம் அஜிஜி கூறும்போது, ஈரானின் ராணுவ மற்றும் பாதுகாப்பு படையினரின் பதிலடி நடவடிக்கை என்ற பெயரில் வரைவு மசோதா ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரித்து வருகின்றனர்.
இதன்படி ட்ரம்ப்பை கொலை செய்யும் நபருக்கு யூரோ மதிப்பில் 5 கோடி (இந்திய மதிப்பில் 561 கோடி) பரிசு தொகை வழங்கப்படும் என அந்த மசோதா தெரிவிக்கின்றது.
ட்ரம்ப், நெதன்யாகு மற்றும் அமெரிக்க கடற்படை தளபதி பிராட் கூப்பர் ஆகிய 3 பேரும் காமேனி படுகொலைக்கு முக்கிய பின்னணியாக இருந்தவர்கள். அந்த தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிட்டவர்கள். இதனால், இதற்கான சரியான பதிலடியை அவர்கள் எதிர்கொண்டே ஆக வேண்டும் என அஜிஜி கூறியுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் அல்லது அதன் மைய தலைமைக்கு எதிரான எந்தவொரு நேரடி ராணுவ தாக்குதலுக்கும் விரைவான பதிலடி கொடுக்கப்படும். அது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுடன் மட்டும் நில்லாமல், அவர்களுடன் கூட்டணியாக சேர்ந்து செயல்படும் அரபு நாடுகளின் மீதும் இந்த தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் வகையில் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.