றொரன்டோவில் வாகன கடத்தல்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
றொரன்டோவில் வாகன கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
நட்சத்திர வீரர் மிட்ச் மார்னரின் கார், இட்டோபிக் திரையரங்கு ஒன்றின் எதிரில் ஆயுத முனையில் அண்மையில் கொள்ளையிடப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் வாகனக் கொள்கை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டில் மொத்தமாக இடம்பெற்ற வாகனக் கொள்கை சம்பவங்களை விடவும் இந்த ஆண்டு இதுவரையில் கூடுதல் எண்ணிக்கையில் வாகன கொள்கைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் வாகனக் கொள்ளைச் சம்பவங்களை சிலர் மேற்கோண்டு வருவதாக றொரன்டோ பொலிஸ் தலைமையகத்தின் இன்ஸ்பெக்டர் ரிச்சர்ட் ஹரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதிலும் றொரன்டோவில் 59 வாகன கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த ஆண்டில் இதுவரையில் 60 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கார் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 20 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.