கனேடிய மாகாணமொன்றில் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு: மீறினால் பிழை
பெருவெள்ளம் சூழ்ந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பயணக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கத் தவறும் சாரதிகளுக்கு பிழை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த வார தொடக்கத்தில் வீசிய புயல் மற்றும் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் மாகாணத்தின் முக்கிய பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.
இந்த நிலையில் குறிப்பிட்ட பகுதிகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு, இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இதனையடுத்தே பிரிட்டிஷ் கொலம்பியா சாரதிகளுக்கு மாகாண நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தற்போதைய சூழலில் சாலைகளை பயன்படுத்த வேண்டும் எனவும், பயணக் கட்டுப்பாடுகளுக்கு இணங்கத் தவறும் சாரதிகளுக்கு 230 டொலர் முதல் ஒவ்வொரு குற்றத்திற்கும் பிழை விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
மேலும், பிரதான சாலைகள் 99, 9, 1 மற்றும் 7 ஆகியவற்றில் சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மட்டுமின்றி, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பிரிட்டிஷ் கொலம்பியா சாரதிகளுக்கு இந்த விவகாரத்தில் பிழை விதிக்கப்படவில்லை எனவும், விதிகளை மதிப்பதில் பிரிட்டிஷ் கொலம்பியா மக்களுக்கு நிகர் அவர்களே எனவும் அமைச்சர் Rob Fleming தெரிவித்துள்ளார்.